Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

Tamil FM

                                                                                   

Friday, February 26, 2010

என் இதயத்தில் நீ

மலர்ந்த மலரானது இறக்கும் வரை
அதன் வாசனை
மலரைவிட்டு நீங்குவதில்லை
இதயத்தில் மலர்ந்த காதல்
இதயம் இறக்கும் வரை
இதயத்தைவிட்டு நீங்குவதில்லை

உள்ளத்தால் உறவாகி
உணர்வுக்குள் நினைவாகி
கனவுக்குள் கவிதையாகி
கவிதைக்குள் காதலாகி
வந்து விழுந்தாயடி காதல் விதையாய்
என் இதயத்தில்

காதல் விதையாய் வந்த நீ
என் இதயத் துடிப்போடு சேர்ந்து வளர்கிறாய்
என்னுள் இதயத் துடிப்பு இருக்கும் வரை
என் இதயத்தில் வாழ்ந்திடுவாய்


என்னில் இதயம் ஒன்று இருக்கும் வரை
என்னில் இருந்து உனை யாரலும் பிரிக்க முடியாது
ஏனெனின்
என் இதயத்தின் துடிப்போடு சேர்ந்து விட்டாய் நீ

உடலில் இதாயம் என்பது ஒன்றுதான்
என் இதயத்தில் வாழ்பவள் ஒருத்தி மட்டும் தான்
அது
நீ மட்டும் தான் என் காதலியே



நீ இதயத்தில் வாழும் வரை
என் உடலை உருக்கி
உன்னை வாழ வைப்பென்
நீ இதயத்தில் வாழும் வரைதான்
இந்த உடலும் இருக்கும்
இதயத்தில் துடிப்பும் இருக்கும்

இறுதி துடிப்பை துடித்து
தன் துடிப்பை நிறுத்திகொள்ளும் வேளையிலும்
உன்னை நேசிக்குமடி என் இதயம்

No comments:

Post a Comment

 

Chat

Followers