Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

Tamil FM

                                                                                   

Friday, February 26, 2010

இரண்டு என்றாலும் ஒன்று

கண்கள் இரண்டானாலும்
பார்வை என்றும் ஒன்று
கரைகள் இரண்டானாலும்
ஓடும் நதி ஒன்று
சிறகு இரண்டானாலும்
பறப்பு என்பது ஒன்று

குயில்கள் வேறு ஆனாலும்
கூவும் ஓசை ஒன்று
உறவும் பிரிவும் இரண்டானாலும்
தாங்கும் உள்ளம் ஒன்று
உண்மை பொய் இரண்டானாலும்
பேசும் வார்த்தை ஒன்று
இன்பம் துன்பம் இரண்டானாலும்
ஏற்கும் இதயம் ஒன்று

வளர்தல் தேய்தல் இரண்டானாலும்
பிறை என்பது ஒன்று
வெற்றி தோல்வி வேறானாலும்
போட்டி என்பது ஒன்று
ஆறு கேணி வேறானாலும்
நீர் என்பது ஒன்று
கள்ளும் பாலும் வேறானாலும்
வெண்மை என்பது ஒன்று
களவும் பொய்யும் வேறானாலும்
சேரும் பாவம் ஒன்று
இரவும் பகலும் வேறானாலும்
நாள் என்பது ஒன்று
பூவும் காற்றும் வேறானாலும்
மலர்தல் என்பது ஒன்று
தென்றல் புயல் வேறானாலும்
காற்று என்பது ஒன்று
செடிகள் இரண்டு ஆனாலும்
பூவின் மணம் ஒன்று
உள்ளம் இரண்டு என்றாலும்
காதல் என்பது ஒன்று
பக்கம் இரண்டு கொண்டாலும்
இலை என்பது ஒன்று
விழுதுகள் பற்பல என்றாலும்
ஆல் என்பது ஒன்று
எறும்பு யானை என்றாலும்
உள்ளே உயிர் ஒன்று
இழமை முதுமை வேறானாலும்
தழுவும் மரணம் ஒன்று
ஏழை செல்வர் ஆனாலும்
வாழ்வின் முடிவது ஒன்று
ஆண்டி அரசன் என்றாலும்
சேரும் காடு ஒன்று
எல்லாம் இங்கே ஒன்றேயானால்
உனக்குள் பிரிவு ஏனடா?
ஒற்றுமை நீங்குதல் கேடடா
நீதி என்பது ஒன்றென்போம்
நியாயம் என்பது ஒன்றென்போம்
சாதியென்பது ஒன்றென்போம்
சமயம் என்பதும் ஒன்றென்போம்

வெற்றியை மனதினுள் வைத்திடு
தோல்வியை படிகளாய் மாற்றிடு
அத்ர்மத்தை அடியோடு அழித்திடு
தர்மத்தை காத்திட உழைத்திடு
உன் உள்ளக் கோவிலைத்திறந்திடு
அன்பெனும் தெய்வத்தை இருத்திடு
உன்மேல் நம்பிக்கை வைத்திரு
நல்லதை நாளும் நினைத்திடு
நினைத்ததை முடித்திடவிழித்திடு
இயற்கையை என்றும் மதித்திடு
தெய்வமே உனைத்தேடும் காத்திரு

No comments:

Post a Comment

 

Chat

Followers