Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

Tamil FM

                                                                                   

Friday, September 24, 2010

உன்னைத் தேடி

நான் பார்த்தேன்


என்பதற்காய்
நீ...........
மட்டும் ஏன் ஏங்குகின்றாய்..

காதலின் தேடலில்
என்
கண்களுக்கு அகப்பட்டவள்
நீ மட்டுமே!

உன் தேடல்களை
நான் தேடவில்லை
நீ என்னைத்
தேடாத வரை

உன் வருகைக்காய்
காத்திருந்த
என் கண்களில்.....
இமைகள் கூட
உதிர்ந்து விட்டன!

நீ ஆயிரத்தில்
ஒருத்தி என்றேன்...
நான்
வட்டத்தில் ஒருத்தன்
என்றாய்...

உன் கூந்தலோடு என்னை
அனைத்து முத்தமிட்டாய்
உன்-
அன்பை நான் பெற்றெடுக்க

நீ என்னை விட்டுச்
சென்றதாள் - உடைந்தது
நான் மட்டுமல்ல
என் இதயமும் தான்!

காவியமான என்
வேதனைகளை � அன்று
எட்டிப்பார்த்தாய்
உன் - யன்னலூடாக

கால தேவதன்
அழைத்ததற்காய்
நீ...............
மட்டும் சென்று விட்டாய்
என்னை
தனிமையில் விட்டு....


நான் மட்டும்
உன்னைப் போல்
இருந்திருந்தால்
என்றோ சென்றிருப்பேன்
என் புதிய வாழ்க்கையைத்
தேடி........

நீ உன்
புது வாழ்வுக்காய்
எம்.......
பழைய வாழ்வை
மறந்து விட்டாய்

உன்னைத் தேடி � நான்
நடந்த
என் பாத மண்ணை
இமய மலையாய்
குவித்து வைத்திருக்கின்றேன்.

நீ பிறிந்து சென்றாலும்
உன் நினைவாய்
கல்லறை ஒன்றைக்
கட்டுவதற்காய்.....

ஏன் என்னை
விட்டுச் சென்றாய்
என்னை விட
மரணம் தான்
உனக்கு பிடித்து
விட்டதோ!

No comments:

Post a Comment

 

Chat

Followers