Hello Guest! Welcome to our Website.
Something you might want to know about us.
Don't be hesitated to contact us if you have something to say.

Tamil FM

                                                                                   

Friday, March 19, 2010

பொன்மொழிகள்

கீதாசாரம்

*

எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
*

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
*

எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
*

உன்னுடையதை எதை இழந்தாய் எதற்காக நீ அழுகிறாய்
*

எதை நீ கொண்டு வந்தாய் ? அதை நீ இழப்பதற்கு.
*

எதை நீ படைத்திருக்கிறாய், அது வீணாகுவதற்கு.
*

எதை நீ எடுத்துக் கொண்டாயோ, அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
*

எதை கொடுத்தாயோ, அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
*

எது இன்று உன்னுடையதோ, அது நாளை மற்றொவருடையதாகிறது.
*

மற்றொரு நாள் அது வேறொருவருடைதாகும்.
*

இந்த மாற்றம் உலக நியதியாகும்



- நீ இறக்கும்போது உனக்காக அழக்கூடியவர்களை உன் உயிருள்ளபோதே தேடி வைத்துக்கொள்

- தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே மனிதன் முன்பாக வெட்கப்படு அப்பொழுதே உனக்கு விமோசம் ஆரம்பம்

- எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு; கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு

- மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்.

- பணம் இருந்தால் உன்னை உனக்குத் தெரியாது. பணம் இல்லாவிட்டால் யாருக்கும் உன்னைத் தெரியாது.

- கணவன் குடித்தால் பாதி வீடு எரியும். மனைவி குடித்தால் முழு வீடும் எரிந்து கொண்டிருக்கும்.

- நாக்கு கொடிய மிருகம். ஒருமுறை அவிழ்த்து விட்டால் கட்டுவது கடினம்தீய செயல் குறித்து தெய்வத்தின் முன்னால் வெட்கப்படாதே! மனிதன் முன்பாக வெட்கப்படு! அப்பொழுதே உனக்கு விமோசனம் ஆரம்பம்! யாருடைய குறைகளை எண்ணிவிட முடியுமோ அவரே உண்மையில் உயர்ந்த மனிதர்!

- எட்டப்பனின் வாரிசு இன்னும் உயிரோடு; கடன்காரனிடம் காட்டிக்கொடுக்கிறதே வாசலில் கிடக்கும் செருப்பு!

- மணிக்கணக்கில் உபதேசம் செய்வதைவிட ஒரு கணப்பொழுதாயினும் உதவி செய்வது மேல்!

அருகில் இருக்கும்போது கோபுரங்கள்கூட உயரமாகத் தெரிவதில்லை. தூரத்தில் இருக்கும்போதே பிரமாண்டமாகத் தெரிகின்றன.

- மறக்க வேண்டியவைகளை மறக்காமல் நினைத்திருப்பதும் மறக்க வேண்டாதவகைகளை மறந்துவிடுவதும்தான் இந்த உலகத்தின் இன்றைய துன்பங்களுக்கு காரணம்

- ஒரு மனிதன் விழாமலே வாழ்ந்தான் என்பது பெருமையல்ல@ விழுந்தபோதெல்லாம் எழுந்தான் என்பதுதான் பெருமை!

- மனிதனின் இயற்கையான குணம் சிறப்பாகச் சிந்திப்பது ஆனால் - முட்டாள்தனமாக செயற்படுவது!

- மனித முயற்சியால் எவ்வளவு முடியுமோ, அவ்வளவும் செய்து பார். ஒவ்வொரு தடவையும் உனக்குத் தோன்றுவது கடவுள் இருக்கிறான் என்பதே!

- வெளிச்சத்திலிருந்து இருட்டுக்கு வந்தால் கண் தெரிவதில்லை. இருட்டிலேயே வந்தால் கண் நன்றாகத் தெரிகிறது. துன்பத்திலே வாழ்பவனுக்குத்தான் அறிவு பல வகையில் வேலை செய்கிறது.

- பணமும், பதவியும் மோசமானவையென்று ஞானிகள் ஏன் சொல்கிறார்கள்.? அவை வரக் கூடாதவனுக்கு வருவதால்: கிடைக்கக் கூடாதவனுக்குக் கிடைப்பதால்!

- தெய்வ பக்தியுள்ளவன் வாழ்க்கையில் அஞ்சுகிறான். ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. நாத்திகன் வாழ்க்கையைக் கண்டு அஞ்சுவதில்லை. ஆனால் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறான்.

- தாய் பசித்திருக்கத் தாரத்திற்கு சோறூட்டாதே. நாளை நீ பசித்திருக்க உன் பிள்ளையும் அதே தவறைச் செய்து கொண்டிருப்பான்.

- எந்த நினைவு உன்னை அதிகமாக துன்புறுத்துகிறதோ, அதற்குப் பெயர்தான் பசுமையான நினைவு.

- காலை நேரம் எப்படித் தோன்றுகிறதோ, மாலை நேரமும் அப்படியே தோன்றுகிறது. விடியும் பொழுதிற்கும், முடியும் பொழுதிற்கும் தோற்றத்தில் வேறுபாடில்லை. இன்ப துன்பங்களையும் அப்படியே நினைத்துவிடு. எந்தக் கட்டத்திலும் நீ அழவேண்டிய அவசியமிருக்காது.

- அடிக்கடி தவறு செய்கிறவன் அப்பாவி. ஒரே தவறைத் திரும்பத் திரும்பச் செய்கிறவன் மூடன். ஒரு தவறுமே செய்யாதவன் மரக்கட்டை. தன்னையறியாமல் தவறு செய்து, தன்னையறிந்து திருத்திக் கொள்கிறவனே மனிதன்.

- பூமியை ஆழமாகத் தோண்டினால்தான் தண்ணீர் கிடைக்கிறது. உண்மையான அன்பு வைப்பவனுக்குத்தான், நன்றி நிரம்பவருகிறது.

No comments:

Post a Comment

 

Chat

Followers